இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

திருப்பூர்: வெள்ளக்கோவில் அருகே நூற்பாலையில் தீ விபத்து

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே செவ்வாய்க்கிழமை ஒரு நூற்பாலையில் தீ விபத்து நேரிட்டது.

News image
தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்.
Updated On :17 ஆகஸ்ட் 2021, 8:43 am

DIN

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே செவ்வாய்க்கிழமை ஒரு நூற்பாலையில் தீ விபத்து நேரிட்டது.

இங்குள்ள திருமங்கலத்தில் முருகேஷ் (40) என்பவருக்குச் சொந்தமான ஓபன் என்ட் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இந்த நூற்பாலை பகல் நேரத்தில் வழக்கம் போல இயங்கிக் கொண்டிருந்த போது, ஒரு இயந்திரத்திலிருந்து புகை வந்தது.

அதைப் பார்த்த தொழிலாளர்கள் இயந்திரத்தை நிறுத்திய நிலையில், திடீரென தீப்பிடித்து நாலாபுறமும் பரவியது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் சி.தனசேகரன், நிலைய போக்குவரத்து அலுவலர் வேலுச்சாமி மற்றும் தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி தீயணைப்பு வாகனத்தில் இருந்து தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். மின்சாரக் கோளாறு காரணமாக தீப்பிடித்துள்ளது. இதில் பஞ்சு பேரல்கள், கட்டடத்தின் சிமெண்ட் மேற்கூரையின் சில பகுதிகள் எரிந்து நாசமாயின.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.