கோவையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 210 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று அதிக அளவில் கரோனா பதிவான நிலையில் இன்று சென்னையை கோவை மாவட்டம் முந்தியுள்ளது.
சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 198 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 5,41,809 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா சிகிச்சையிலிருந்து புதிதாக 206 பேர் குணமடைந்த நிலையில், 2 பேர் உயிரிழந்தனர். இன்று மட்டும் 24,159 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 2,061 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை கோவைக்கு அடுத்தபடியாக ஈரோட்டில் 156 பேரும், தஞ்சாவூரில் 109 பேரும், செங்கல்பட்டில் 108 பேரும், சேலத்தில் 103 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.