தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

தமிழகத்தில் புதிதாக 1,797 பேருக்கு கரோனா; 31 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,797 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

தமிழகத்தில் புதிதாக 1,797 பேருக்கு கரோனா

Updated On :18 ஆகஸ்ட் 2021, 2:01 pm

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,797 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 31 பேர் உயிரிழந்தனர். 

நேற்று 1,804 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கரோனா குறைந்துள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை புதன் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதிதாக 1,797 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 25,94,233-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக 31 பேர் பலியாகியுள்ளனர். இது வரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,610-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து 1,908 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 25,39,540-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 20,083 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் அதிக அளவாக கோவையில் அதிக பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 210 பேரும், சென்னையில் 198 பேரும், ஈரோட்டில் 156 பேரும், தஞ்சாவூரில் 109 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.