வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர் மரணமடைந்தது குறித்து...

News image

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மூத்த தலைவர் மௌலானா சல்மான்... - கோப்புப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 2:06 pm

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மூத்த தலைவர் மர்ம வாகனம் மோதியதில் உயிரிழந்துள்ளார்.

பாகிஸ்தானின் பஹாவல்பூரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மூத்த தலைவர் மௌலானா சல்மான் கடந்த புதன்கிழமை (ஏப். 29) காலை மர்ம வாகனம் ஒன்று மோதியதில் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மௌலானா சல்மானின் இறுதிச் சடங்கு புதன்கிழமை மாலை நடைபெற்றதாகவும், அந்த நிகழ்வில், நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் பாகிஸ்தானின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் நெருங்கிய கூட்டாளியான சல்மான், இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதல் மற்றும் 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தாக்குதலிலும் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது.

இத்துடன், கடந்த 2025 ஆம் ஆண்டு இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளில் ஜெய்ஷ் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்ட நிலையில், மௌலானா சல்மான் படுகாயங்களுடன் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

Summary

A senior leader of the Jaish-e-Mohammed organization, linked to the Pulwama attack, has died.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.