புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மூத்த தலைவர் மர்ம வாகனம் மோதியதில் உயிரிழந்துள்ளார்.
பாகிஸ்தானின் பஹாவல்பூரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மூத்த தலைவர் மௌலானா சல்மான் கடந்த புதன்கிழமை (ஏப். 29) காலை மர்ம வாகனம் ஒன்று மோதியதில் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மௌலானா சல்மானின் இறுதிச் சடங்கு புதன்கிழமை மாலை நடைபெற்றதாகவும், அந்த நிகழ்வில், நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் பாகிஸ்தானின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் நெருங்கிய கூட்டாளியான சல்மான், இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதல் மற்றும் 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தாக்குதலிலும் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது.
இத்துடன், கடந்த 2025 ஆம் ஆண்டு இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளில் ஜெய்ஷ் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்ட நிலையில், மௌலானா சல்மான் படுகாயங்களுடன் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.
Summary
A senior leader of the Jaish-e-Mohammed organization, linked to the Pulwama attack, has died.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தலைவர் சுட்டுக் கொலை!

நாடாளுமன்றம் கைப்பற்றப்படுவதை எதிர்க்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது: கார்கே

பாகிஸ்தான்: லஷ்கா்-ஏ-தொய்பா இணை நிறுவனா் மீது துப்பாக்கிச் சூடு
நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு



