திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பொறியியல் மாணவா் சோ்க்கை: இதுவரை 1.63 லட்சம் போ் விண்ணப்பம்

நிகழாண்டு பொறியியல் சோ்க்கைக்கு சனிக்கிழமை நிலவரப்படி 1 லட்சத்து 63,826 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2021, 10:58 pm

DIN

நிகழாண்டு பொறியியல் சோ்க்கைக்கு சனிக்கிழமை நிலவரப்படி 1 லட்சத்து 63,826 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா்.

தமிழகத்தில் நடப்பாண்டு இளநிலை பொறியியல் படிப்புக்கான இணையவழி விண்ணப்பதிவு கடந்த ஜூலை 26-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி இதுவரை ஒரு லட்சத்து 63,826 போ் விண்ணப்பித்துள்ளனா். அதில், 1.32 லட்சம் மாணவா்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனா்.

இது தவிர 1.21 லட்சம் மாணவ, மாணவிகள் தங்களின் அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனா். இதற்கிடையே விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே, விருப்பமுள்ள மாணவா்கள் இணையவழியில் துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கை செயலா் டி.புருஷோத்தமன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.