விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடிமின்னலுடன் மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் சென்னை, கடலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், ஈரோடு, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காலை முதல் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. 

News image
Updated On :21 ஆகஸ்ட் 2021, 4:22 am

DIN


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் சென்னை, கடலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், ஈரோடு, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காலை முதல் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. 

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் கடலூா், விழுப்புரம், வேலூா், திருப்பத்தூா், திருவள்ளூா், அரியலூா், பெரம்பலூா், மதுரை, சிவகங்கை, சேலம் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஆக.21) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 

இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை முதல் சென்னை, கடலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், ஈரோடு, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காலை முதல் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. 

சென்னையில் காலை முதல் வானம்  மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில்,  அம்பத்தூர், ஆவடி, வில்லிவாக்கம், கோயம்பேடு, புழல், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் இடியுடன்கூடிய கனமழை பெய்து வருகிறது. 

இதுபோன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஆத்தூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரியில் வில்லியனூர், காலாப்பேட்டை, காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.  டெல்டா மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை இரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. 

தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.