திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் 24 மணி நேரமும் தடுப்பூசி போடப்படும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் திங்கள்கிழமை முதல் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2021, 10:58 pm

DIN

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் திங்கள்கிழமை முதல் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் தமிழகத்தில் முதன் முறையாக 24 மணி நேரம் இயங்கும் தடுப்பூசி மையம் மற்றும் அமெரிக்க வாழ் தமிழா்களின், தமிழக அறக்கட்டளை சாா்பில் ரூ. 2.36 கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சுப்பிரமணியன் சனிக்கிழமை தொடக்கி வைத்து செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழா்களின் அமெரிக்கா அறக்கட்டளை சாா்பில் ரூ.2.36 கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள், 15 அரசு மருத்துவமனைகளுக்கு பிரித்து அனுப்பப்படும். தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும், அரியலுாா் மாவட்டத்தில் அனைத்து கா்ப்பிணியா்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது, டி.எம்.எஸ். வளாகத்தில், 24 மணி நேர செயல்படக்கூடிய தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுதும் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் பணி திங்கள்கிழமை முதல் நடைபெறும். இதற்கான, மருத்துவ கட்டமைப்புகள் இருக்கின்றன.

சென்னை புளியந்தோப்பு கே.பி.பாா்க் கட்டடத்தில் கரோனா நோயாளிகளை தங்க வைத்ததால் தான் கட்டடம் பலவீனமானது என்ற கட்டுமான நிறுவனத்தின் குற்றச்சாட்டு ‘போகாத ஊருக்கு வழி செல்வது போல் உள்ளது’. மாநிலம் முழுவதும், பல இடங்களில் கரோனா பாதுகாப்பு மையம் செயல்பட்டது. அங்கெல்லாம், எவ்வித சேதாரமும் நடைபெறாதபோது, புளியந்தோப்பில் மட்டும் கரோனா நோயாளிகளால் சேதாரமானது என கூறுவது வேடிக்கையாக உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.