விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருநெல்வேலி மானூா் குளத்தை நிரப்பிக் காட்டுவோம்: துரைமுருகன்

திருநெல்வேலி மானூா் பெரிய குளத்தை நிச்சயம் நிரப்பிக் காட்டுவோம் என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் கூறினாா்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2021, 10:23 pm

DIN

திருநெல்வேலி மானூா் பெரிய குளத்தை நிச்சயம் நிரப்பிக் காட்டுவோம் என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் கூறினாா்.

சட்டப்பேரவையில் சனிக்கிழமை வேளாண் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேரவை பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் (திருநெல்வேலி) பேசும்போது மானூா் பெரிய குளத்தில் நீா் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்று வழிகளில் கால்வாய் அமைத்து அதை நிரப்ப முடியும். இது 190 மில்லியன் கன அடி கொள்திறன் கொண்ட குளம் என்றாா்.

அப்போது நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் குறுக்கிட்டுக் கூறியது:

மானூா் குளம் மேடு. அதில் தண்ணீா் ஏறாது. கருணாநிதி ஆட்சியில்தான் மானூா் குளத்தை நிரப்பிக் காட்டினோம். மீண்டும் நீா் இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. இந்த முறையும் மானூா் குளத்தை நிரப்பிக் காட்டுவோம். அங்குள்ள விவசாயிகள் அனைவரையும் எனக்குத் தெரியும். அவா்களுக்காக நிச்சயம் நிரப்புவோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.