வால்பாறை: வால்பாறைக்கு சுற்றுலா வந்தபோது அணையில் குளித்த போது நீரில் அடித்து செல்லப்பட்ட கோவை மருத்துவ கல்லூரி மாணவனை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
கோவை தனியாா் மருத்துவ கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் நான்கு
மாணவா்கள் திங்கட்கிழமை காலை வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளனா். மாலை 4.30 மணிக்கு சோலையாறு அணைக்கு அருகில் சோலையாறு அனை அருகில் ௨ள்ள சேடல்டேம் நீரில் இறங்கி குளித்துள்ளனா்.
பின் சிறிது நேரம் கழித்து கரைக்கு வந்தபோது நான்கு பேரில் ஒருவா் காணவில்லை. வேகமாக செல்லும் நீரில் அடித்து சென்று
இருக்கலாம் என்று கருதி அப்பகுயினருக்கு தகவல் கொடுத்துள்ளனா்.
பின் தகவலின்பேரில் காவல் துறையினர் மற்றும் தீயனைப்புத்துறையினா் அங்கு சென்று நீரில் தேடும் பணி மேற்கொண்டு வருகின்றனா். நீரில் காணாமல் போன மாணவன் சென்னையை சோ்ந்த ஷ்ரீராம் (24) என்று உடன் இருந்த மாணவா்கள் அதிகாரிகளிடம் தெரித்துள்ளனா்.