விழாவிற்கு, மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம் தலைமை வகித்தார். பொது விநியோகத் திட்ட மாவட்ட பதிவாளர் ஆர்.ராமசுப்பு, மாவட்ட வழங்கல் அலுவலர் வி.லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூத்தாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளர் வி.எஸ்.வெங்கடேசன் வரவேற்றார். திருவாரூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் அங்காடியை திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி வைத்தார்.
தொடர்ந்து, பயனாளிகளுக்கு அரிசி, சர்க்கரை, து. பருப்பு உள்ளிட்ட அங்காடிப் பொருள்களை வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், வட்டாட்சியர் என்.கவிதா, மன்னார்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஐ.வி.குமரேசன், வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.