ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

’தடுப்பூசி செலுத்தாவிட்டால் ஊதியம் இல்லை’ அறிக்கை ரத்து: மதுரை மண்டல மின் வாரியம்

கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாத மின் வாரிய ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என மதுரை மண்டல மின்வாரிய பொறியாளர் சுற்றறிக்கை மூலம் இன்று காலை தெரிவித்திருந்த நிலையில் தற்போது அந்த அறிக்கை ரத்து செ

News image
’தடுப்பூசி செலுத்தாவிட்டால் ஊதியம் இல்லை’ அறிக்கை ரத்து: மதுரை மண்டல மின் வாரியம்
Updated On :2 டிசம்பர் 2021, 11:38 am

DIN

கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாத மின் வாரிய ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என மதுரை மண்டல மின்வாரிய பொறியாளர் சுற்றறிக்கை மூலம் இன்று காலை தெரிவித்திருந்த நிலையில் தற்போது அந்த அறிக்கை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மதுரை மண்டலத்திற்கு உள்பட்ட மின்வாரிய ஊழியர்கள் பலரும் முறையாக கரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்பதற்காக  வருகிற டிச.7 ஆம் தேதிக்குள் அனைத்து ஊழியர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என மண்டல மின்வாரிய சுற்றறிக்கையில் உத்தரவு வெளியாகியிருந்தது.

அதில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போது அந்த அறிக்கையை ரத்து செய்வதாக மதுரை மண்டல மின்வாரியம் தெரிவித்திருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.