வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

போரூர் ஏரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை போரூர் ஏரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 

News image
சென்னை போரூர் ஏரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 
Updated On :4 டிசம்பர் 2021, 5:45 am

DIN

சென்னை போரூர் ஏரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 

வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த ஆண்டு தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. தலைநகர் சென்னையிலும் தொடர் கனமழை பெய்து வந்ததால் பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகள் நீரில் மூழ்கின. 

எனினும் தமிழக அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது சென்னையில் வெள்ளம் வடிந்தாலும் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி காணப்படுகின்றன. 

அந்த வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை போரூர் ஏரியில் ஆய்வு மேற்கொண்டார். போரூர் ஏரியின் நீர் இருப்பு, அதன் உறுதித் தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, அப்பகுதியில் மக்களுக்கு நிவாரணப் பொருள்களையும் வழங்கினார். 

ஐயப்பந்தாங்கல், மவுலிவாக்கத்தில் பாதிப்புகளையும் முதல்வர் பார்வையிடுகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.