கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

ஒற்றுமையுடன் இருந்தால் எதிரிகளை வெல்லலாம்: சசிகலா

நம் தலைவர்கள் காட்டிய வழியில் ஒற்றுமையுடன் இருந்தால் எதிரிகளை வெல்ல முடியும் என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். 

News image

சசிகலா

Updated On :5 டிசம்பர் 2021, 8:36 am IST


சென்னை: நம் தலைவர்கள் காட்டிய வழியில் ஒற்றுமையுடன் இருந்தால் எதிரிகளை வெல்ல முடியும் என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
அதிமுக தலைமையகத்தில் அதிமுக தொண்டர்களான பிரதாப் சிங், ராஜேஷ் ஆகியோர் தாக்கப்பட்டது வேதனையளிக்கிறது. இனியும் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு என்னை போன்றவர்களால் சும்மா இருக்க முடியாது. 

மேலும் தொண்டர்களின் நலனில் அக்கறை செலுத்தும்போதுதான் அதிமுகவின் மீது நல்ல எண்ணம் உருவாகும். எந்த இயக்கமாக இருந்தாலும் தொண்டர்களை மதிக்க வேண்டும். 

ஒரு இயக்கத்துக்கு தேவை கொடி பிடிக்கும் தொண்டர்களே தவிர, தடி எடுக்கும் குண்டர்கள் அல்ல.  நாம் ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே எதிரிகளை வெல்ல முடியும் என்பதன் அவசியத்தை அனைவரும் உணர வேண்டும். இன்று அதிமுக தொண்டர்களின் நிலையை எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கண்ணீருடன் பார்த்து கொண்டிருப்பார்கள் என சசிகலா கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.