ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மணிமுத்தாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறக்க உத்தரவு

பாசனத்திற்காக மணிமுத்தாறு நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 12:53 pm

DIN

பாசனத்திற்காக மணிமுத்தாறு நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், மணிமுத்தாறு நீர்த்தேக்கத்திலிருந்து நடப்பாண்டிற்கான (2021-2022) முன்னுரிமை அல்லாத பகுதியான 3-வது மற்றும் 4-வது ரீச்சுகளை சார்ந்த 12,018 ஏக்கர் மறைமுக பாசனப்பரப்புகளுக்கு 10.12.2021 முதல் 31.03.2022 முடிய 112 நாட்களுக்கு பிசான பருவ சாகுபடி செய்வதற்காக தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. 

இதன் மூலம் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நாங்குநேரி, திசையன்விளை, இராதாபுரம், ஏரல், திருவைகுண்டம், சாத்தான்குளம் மற்றும் திருச்செந்தூர் வட்டங்களில் உள்ள 12,018 ஏக்கர் மறைமுக பாசன நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.