டாப்செங்காட்டுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய(பொறுப்பு) மருத்துவர் ப.சம்பத்குமார், உதவி மருத்துவர்கள் ச. தீபக், பெ.ஜெகதீஸ்வரன் ஆகியோர் தலைமையில் மருந்தாளுநர் செந்தில்ஜோதி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் நேசம் சமூக கிராம மேம்பாட்டு அறக்கட்டளை உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்ட 10 மருத்துவக் குழுவினர் வியாழக்கிழமை மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரை டாப்செங்காட்டுப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட 8 கிராமங்களில் 400 வீடுகளுக்கு நேரில் சென்று 205 பேருக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தினர்.