கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 18 மாத இடைவெளிக்குப் பின்னர் IIL/2021-22/AH/IN1920A139/164, நாள்.28.09.2021, IIL/2021-22/AH/IN1920A139/192, நாள்.25.10.2021-இன் வழி மத்திய அரசிடமிருந்து 28.85 லட்சம் அளவில் கோமாரி நோய் தடுப்பூசி பெறப்பட்டது. இதன் மூலம், ஈரோடு, தஞ்சாவூர், சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, மதுரை ஆகிய மாவட்டங்களிலுள்ள அனைத்து மாட்டினங்களுக்கும் தடுப்பூசிப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நோய்க் கிளர்ச்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து, தஞ்சாவூர், திருவண்ணமாலை ஆகிய மாவட்டங்களுக்கு உடனடித் தேவைக்கு தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டு நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.