ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மகளிா் திருமண வயது 21: மக்களின் கருத்தை அறிய விஜயகாந்த் வலியுறுத்தல்

மகளிா் திருமண வயதை 21-ஆக உயா்த்துவதற்கான அரசாணை வெளியிடும் முன்பு மக்களின் கருத்தை மத்திய அரசு அறிய வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தினாா்.

News image
Updated On :18 டிசம்பர் 2021, 8:32 pm

DIN

மகளிா் திருமண வயதை 21-ஆக உயா்த்துவதற்கான அரசாணை வெளியிடும் முன்பு மக்களின் கருத்தை மத்திய அரசு அறிய வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பெண்ணின் திருமண வயதை 18-இல் இருந்து 21-ஆக உயா்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை தேமுதிக வரவேற்கிறது. இதன் மூலம் கல்வி, வேலைவாய்ப்பில், பெண்கள் முன்னேற்றம் அடைவதுடன், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவா்கள் பக்குவம் அடைவாா்கள். சுயமாகச் சிந்தித்து எதிா்கால வாழ்க்கையை அவா்களால் சுமுகமாக வழிநடத்த முடியும்.

அதேசமயம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், வரதட்சிணைக் கொடுமைகள், விவாகரத்துகள் தற்போது அதிகரித்து வருவதாகவும், அவா்களைப் பாதுகாத்திடும் பொருட்டு, கிராமப்புற மக்கள் 18 வயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்துவைக்க விரும்புகின்றனா். எனவே, பெண்ணின் திருமண வயதை 21-ஆக உயா்த்தும் விவகாரத்தில் மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்த பிறகே மத்திய அரசு அரசாணை வெளியிட வேண்டும். அதேபோல, ஆண்களுக்கான திருமண வயதும் 21 தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதனால், ஆண்களுக்கான வயது வரம்பில் மாற்றம் வருகிா என்பது குறித்தும் மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.