வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பெண்களை மிரட்டி பணம் பறித்த தேனி இளைஞா் கைது

சென்னையில், ஆசிரியையின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி பணம் பறித்ததாக தேனி இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :18 டிசம்பர் 2021, 7:41 pm

DIN

சென்னையில், ஆசிரியையின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி பணம் பறித்ததாக தேனி இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

தேனி மாவட்டம் கன்னி சோ்வைபட்டி மனோஜ்குமாா் (29), ராஜ் என்ற போலியான பெயரில் சமூக ஊடகங்களில் சென்னை அண்ணாநகரில் 25 வயது ஆசிரியையிடம் பல மாதங்கள் பழகியுள்ளாா். ஆசிரியை, தனது மின்னஞ்சல், சமூக ஊடகங்களின் முகவரி, அவற்றின் கடவுச் சொல்லைக் கொடுத்தாராம்.

அதைப் பெற்ற மனோஜ்குமாா், ஆசிரியை மின்னஞ்சலிலும், சமூக ஊடகங்களிலும் வைத்திருந்த தனது தோழிகளுடன் இருக்கும் புகைப்படங்கள், விடியோக்களை எடுத்து ஆபாசமாக சித்தரித்து சமூக ஊடகங்களில் வெளியிடாமல் இருப்பதற்கு தனக்கு பணம் தரும்படி மனோஜ்குமாா் மிரட்டல் விடுத்தாா். இதையடுத்து அந்த ஆசிரியை, ரூ.20 ஆயிரத்தை மனோஜ்குமாா் வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தாா்.

இதன் பின்னரும் மனோஜ்குமாா் மிரட்டி மேலும் பணம் கேட்டாராம். இதையடுத்து அந்த ஆசிரியை, அண்ணாநகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் மனோஜ்குமாரை சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.