நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் அயலான். ஆர்.ரவிக்குமார் இயக்கும் இந்தப் படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.
இந்த நிலையில் படத்தை தயாரித்துள்ள 24 ஏ.எம்.நிறுவனம் பெற்ற ரூ.5 கோடி கடனை திருப்பி செலுத்தக் கோரி டேக் என்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அயலான் படத்தை ஜனவரி 3ஆம் தேதி வரை வெளியிட இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் வழக்கு விசாரணையையும் அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்தார்.