டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு: திரளானோர் பங்கேற்பு

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை இரவு  நடைபெற்றன.

News image
வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு
Updated On :28 ஜனவரி 2024, 5:46 am

DIN

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை இரவு  நடைபெற்றன.

கீழை நாடுகளின் லூர்து எனப் போற்றப்படுகிறது நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம்.  பசலிக்கா அந்தஸ்து பெற்ற இப்பேராலயத்தில்  கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இதன்படி, வேளாங்கண்ணி பேராலய வளாகத்தில் விண்மீன் ஆலயம் அருகே உள்ள புனித சவேரியார் திடலில், கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணி அளவில் தொடங்கி நடைபெற்றன. மறையுரை, கூட்டுத் திருப்பலியுடன் சிறப்பு வழிபாடுகள் தொடங்கப்பட்டன. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.

Story image

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய அதிபர் சி. இருதயராஜ் அடிகளார், பேராலய துணை அதிபர் அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன் மற்றும் உதவி பங்குத் தந்தையர்கள் வழிபாடுகளை மேற்கொண்டனர்.

Story image

திருப்பலியின் நிறைவில், தேவதைகள் போல உடையணிந்திருந்த சிறுமிகள் கொண்டு வந்து அளித்த குழந்தை இயேசுவின் திருச்சொரூபத்தை, பேராலய துணை அதிபர் அற்புதராஜ்  பெற்றுக் கொண்டு, இயேசு பிறப்பை அறிவிக்கும் வகையில், 11.45 மணிக்கு குழந்தை இயேசு சொரூபத்தை பக்தர்களுக்குக் காட்சிப்படுத்தி, கிறிஸ்துமஸ் குடிலில் வைத்து வழிபாடுகள் மேற்கொண்டார்.

Story image

அப்போது, வழிபாட்டில் பங்கேற்றிருந்த பக்தர்கள் இறைப் புகழ்ச்சி வசனங்களுடன் வழிபாடு மேற்கொண்டனர்.  

Story image

பின்னர், பேராலய நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு வாழ்த்துச் செய்தி அறிவிக்கப்பட்டது. பக்தர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய வளாகம், புனித சேவியர் திடலில் நடைபெறும் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றவர்கள்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய வளாகம், புனித சேவியர் திடலில் நடைபெறும் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றவர்கள்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, பேராலய கீழ்க்கோயில்,  விண்மீன் ஆலயம், பேராலய வளாகம் என அனைத்துப் பகுதிகளும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.  பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த திரளான பக்தர்கள் வழிபாடுகளில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.