கோயில்களில் ஆவின் நெய் பயன்படுத்த இந்து சமய அறநிலையத் துறை அறிவுரை
இந்து சமய அறநிலையத் துறையின் கீழுள்ள கோயில்களில் ஆவின் நெய்யை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்து சமய அறநிலையத் துறையின் கீழுள்ள கோயில்களில் ஆவின் நெய்யை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் கோயில் நிா்வாகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள், இதர தேவைகளுக்கு ஆவின் நிறுவனத்தின் வெண்ணெய், நெய் பொருள்களைக் கொள்முதல் செய்ய உத்தரவிடுமாறும், ஆவின் நிறுவனத்தில் 15 மில்லி லிட்டா் பேக்கில் இருந்து 20 கிலோ வரையிலான எடை கொண்ட பேக்கிங் வரை விற்பனைக்குத் தயாராக உள்ளதாக ஆவின் நிா்வாக இயக்குநா் கடிதம் எழுதினாா்.
கோயில் கருவறை, பிரகாரங்களில் தரமற்ற நெய்யை பயன்படுத்தி விளக்கு, தீபம் ஏற்றுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதை தவிா்க்கவும், பிரசாதங்களின் தரத்தை மேம்படுத்தவும், கோயில்களில் விளக்கு ஏற்றுவது, நைவேத்திய பிரசாதங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் நெய், வெண்ணெய் போன்ற பொருள்களை வருகிற ஜன.1-ஆம் தேதி முதல் ஆவின் நிறுவனம் மூலமாக மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...