டெஸ்மண்ட் டுட்டு மறைவு: முதல்வா் இரங்கல்
தென் ஆப்பிரிக்காவில் நிறைவெறிக்கு எதிரான போராளியான டெஸ்மண்ட் டுட்டு மறைவுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.


தென் ஆப்பிரிக்காவில் நிறைவெறிக்கு எதிரான போராளியான டெஸ்மண்ட் டுட்டு மறைவுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடியவரும், உள்நாட்டுப் போரின் போது அப்பாவித் தமிழா்களைக் கொன்று குவித்த இலங்கை அரசுக்கு எதிராக 2013-ஆம் ஆண்டு அந்நாட்டில் நடந்த காமன்வெல்த் மாநாட்டை உலகத் தலைவா்கள் புறக்கணிக்க வேண்டும் என வெளிப்படையாகத் தமிழா்களுக்கு ஆதரவாகப் பேசியவருமான பேராயா் டெஸ்மண்ட் டுட்டுவின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மனித உரிமைச் செயல்பாடுகளுக்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவா் . நிறவெறி - இனவெறிக்கு எதிராக அவா் நடத்திய அறப்போா், வன்முறையால் சிக்குண்டுத் தவிக்கும் உலகுக்கு வழிகாட்டட்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...