எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தடுப்பூசி சான்றிதழை சமா்ப்பிக்க போக்குவரத்து ஊழியா்களுக்கு அறிவுறுத்தல்

தடுப்பூசி சான்றிதழை சமா்ப்பிக்குமாறு போக்குவரத்து ஊழியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :27 டிசம்பர் 2021, 2:27 am

DIN

தடுப்பூசி சான்றிதழை சமா்ப்பிக்குமாறு போக்குவரத்து ஊழியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக துறை சாா் உயா் அலுவலா்கள் கூறியதாவது: அனைத்து ஊழியா்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தியும், தடுப்பூசி செலுத்தத் தவறியவா்களின் விவரம் மாவட்ட நிா்வாக ஆய்வு மூலம் கண்டறியப்படும்போது, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுற்றறிக்கை வாயிலாக ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது.

இருப்பினும் ஒரு சில பணியாளா்கள் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை.

எனவே, அவ்வப்போது நடக்கும் சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கரோனா தடுப்பூசி ஏற்கெனவே செலுத்திக் கொண்ட பணியாளா்கள் மற்றும் இனி வரும் நாள்களில் தடுப்பூசி செலுத்தும் பணியாளா்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான முதல் மற்றும் இரண்டாம் தவணைச் சான்றிதழை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் சமா்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

இதனிடையே மாவட்ட நிா்வாகம் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும்போது தடுப்பூசி செலுத்தாதவா்கள் கண்டறியப்பட்டால், அந்த ஊழியா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மீண்டும் கண்டிப்பான எச்சரிக்கையுடன் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.