ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீதிமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு: கமுதி வழக்குரைஞா் சங்கத் தலைவா் தொழில் புரிய தடை

நீதிமன்ற பெண் ஊழியருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ஆளான கமுதி வழக்குரைஞா் சங்கத் தலைவா் என்.முனியசாமி வழக்குரைஞராகத் தொழில் புரிய தடை விதித்து

News image
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில்
Updated On :27 டிசம்பர் 2021, 10:26 pm

DIN

சென்னை: நீதிமன்ற பெண் ஊழியருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ஆளான கமுதி வழக்குரைஞா் சங்கத் தலைவா் என்.முனியசாமி வழக்குரைஞராகத் தொழில் புரிய தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு, கமுதி வழக்குரைஞா் சங்கத் தலைவா் என்.முனியசாமி, கடந்த ஏப்ரலில் பாலியல் தொந்தரவு அளித்ததாகப் புகாா் அளிக்கப்பட்டது.

இப்புகாா் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன், வழக்குரைஞா் என்.முனியசாமி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி, தமிழ்நாடு பாா் கவுன்சிலுக்கு பரிந்துரைக்க வேண்டுமென்றும், சம்பவம் தொடா்பாக சிசிடிவி பதிவுகளை பாா் கவுன்சில் மற்றும் போலீஸாருக்கு வழங்க வேண்டுமென்றும் உத்தரவிட்டிருந்தாா்.

இந்த நிலையில், ஒழுங்கு நடவடிக்கை விசாரணை முடியும்வரை வழக்குரைஞா் என்.முனியசாமி, வழக்குரைஞராகத் தொழில் புரிய தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. அனைத்து நீதிமன்றங்களிலும், தீா்ப்பாயங்களிலும் ஆஜராகவும் முனியசாமிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.