திருப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு தொடக்க விழா

திருப்பூரில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 137 ஆம் ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் 137 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நிர்வாகிகள்.
திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் 137 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நிர்வாகிகள்.
Published on
Updated on
1 min read

திருப்பூர்: திருப்பூரில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 137 ஆம் ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் 137 ஆம் ஆண்டு தொடக்கவிழா கொண்டாடப்பட்டது. இதில், மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன் கொடியேற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இதில், காங்கிரஸ் நிர்வாகிகள் கதிரேசன், பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், விசுவநாதன், பாகனேரி ரவீந்திரன், கெளஸ் குருசாமி மற்றும் மகிளா காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், விவசாயப் பிரிவு, தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com