சென்னையில் நாளை(டிச.31) இரவு 12 மணிமுதல் வாகனங்களுக்கு தடை
சென்னையில் நாளை இரவு 12 மணிமுதல் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என பெருநகர சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.


சென்னையில் நாளை இரவு 12 மணிமுதல் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என பெருநகர சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
ஒமைக்ரான் கரோனா பரவலை தொடர்ந்து தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், சென்னை காவல்துறை வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில்,
டிசம்பர் 31ஆம் தேதி இரவு 12 மணிமுதல் ஜனவரி 1ஆம் தேதி காலை 5 மணி வரை சென்னை காவல்துறை எல்லைக்குள்பட்ட பகுதிகளில் வாகனங்கள் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணிகள் இரவு 12 மணிக்கு முன்னதாகவே தங்களது பயணங்களை முடித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...