வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இருநாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (டிச.31) நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதி கனமழை பெய்யும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய 10 மாவட்டங்களுக்கும் புதுச்சேரி, காரைக்காலுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை (ஆரஞ்ச் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை(ஜன. 1) திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கும் புதுவை, காரைக்காலுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு?