டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கொடைக்கானலில் குடிநீர் கேட்டு சாலை மறியல்

கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சிப் பகுதியில் குடிநீர் கேட்டு அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:28 pm

DIN


கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சிப் பகுதியில் குடிநீர் கேட்டு அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சிப் பகுதியில்"கடந்த 20 நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை இதனால் வில்பட்டி பிரிவு, அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி,பாறைப்பட்டி, சத்யாகாலணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொது"மக்கள் 100-க்கும்"மேற்பட்டவர்கள் காலிகுடங்களுடன் குடி நீர்கேட்டு சாலை மறியலில்"ஈடுபட்டனர். இதனால் கொடைக்கானல் பள்ளங்கி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வில்பட்டி ஊராட்சி மன்றத்தைச் சேர்ந்த தலைவி மற்றும் உறுப்பினர்கள், காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.

கொடைக்கானல் பகுதிகளில் நகராட்சி மற்றும் "ஊராட்சி பகுதிகளில் தண்ணீர்"டேங் வைத்து தண்ணீர் நிரப்பி வைப்பது" வழக்கம். ஆனால் அந்த தண்ணீர் டேங் வைத்திருக்கும் இடத்தை அருகிலுள்ளவர்கள் ஆக்கிரமிப்பு செய்து அந்த தண்ணீர் டேங்கை எடுத்து விடுகின்றனர். இந்த செயல்களில் அந்தந்த பகுதிகளில் தண்ணீர் விநியோகம் செய்யும் பணியாளர்கள் உதவியுடன் தண்ணீர் டேங்குகள் அகற்றப்படுவதால்"பொது மக்களுக்கு"தண்ணீர் தேவைப்படும் சமயங்களில் தண்ணீர்"கிடைப்பதில்லை." 

கொடைக்கானல் செண்பகனுர் இருதயபுரம் பகுதியிலும்,வில்பட்டி பிரிவு,சந்தை திடல் பகுதிகளிலும் ஏற்கனவே தண்ணீர் டேங் (சின்டெக்ஸ் டேங்) இருந்த இடத்தில் மீண்டும் தண்ணீர் டேங் அமைப்பதற்கு நகராட்சி,மற்றும் ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது பொது மக்களின் கோரிக்கையாகும்.

அவ்வாறு தண்ணீர் டேங்குகளில் தண்ணீர் இருப்பதால் மக்கள் தங்களுக்கு தேவையான நேரங்களில் எடுத்துக் கொள்ளார்கள் இது போல பிரச்னைகள் வராது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.