விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருப்பூரில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து திமுகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :9 பிப்ரவரி 2021, 7:58 am

DIN

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து திமுகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டைக் கண்டித்து திமுக சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதன்படி மாநகராட்சி அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மத்திய மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Story image

இதில், பங்கேற்ற திமுகவினர் கூறியதாவது: 

திருப்பூர் மாநகரில் அனைத்து பகுதிகளிலும் 10 நாள்களுக்கு ஒரு முறை சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். மாநகரில் மலை போல் தேங்கியுள்ள குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். திருப்பூர் மாநகர் மற்றும் மடத்துக்குளம் பகுதியில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை முழுமயாக செயல்படுத்த வேண்டும் என்றனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராசன், வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார், மாநில மாவட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள், தொமுச நிர்வாகிகள், மகளிர் அணியினர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.