சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கார் ஓட்டும்போது பெல்ட் அணிதலுக்கான விழிப்புணர்வுப் பேரணி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புதன்கிழமை போக்குவரத்துக் காவல்துறை சார்பில் கார் ஓட்டுபவர்களுக்கான விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

News image

அருப்புக்கோட்டை நீதிமன்ற வளாகம் முன்பாகத் தொடங்கிய  கார் ஓட்டுபவர்களுக்கான விழிப்புணர்வுப் பேரணியை காவல் ஆய்வாளர் கண்ணன் மற்றும் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் சரவணக்குமார் உள்ளிட்டோர்.

Updated On :10 பிப்ரவரி 2021, 11:02 am

DIN

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புதன்கிழமை போக்குவரத்துக் காவல்துறை சார்பில் கார் ஓட்டுபவர்களுக்கான விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

தமிழகத்தை விபத்தில்லா மாநிலமாக்குதலுக்கான நடைமுறைகள் எனும் காவல்துறையின் திட்டத்தின்படி, கார் ஓட்டுபவர்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அருப்புக்கோட்டை காவல்துறை சார்பில் கார்கள் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. நகரிலுள்ள  நீதிமன்ற வளாகம் முன்பாகத்தொடங்கிய இப்பேரணியை தாலுகா காவல் ஆய்வாளர் கண்ணன் மற்றும் போக்குவரத்துக்காவல் ஆய்வாளர் சரவணக்குமார் ஆகியோர் கொடியசைத்துத்தொடக்கி வைத்தனர்.

சுமார் 40க்கு மேற்பட்ட கார்கள் கலந்து கொண்ட இப்பேரணியானது, புதிய பேருந்து நிலையம், ஸ்ரீஅமுதலிங்கேஸ்வரர் கோவில், அண்ணாசிலை, அகமுடையர் மகால், உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகள் வழியாக திருச்சுழி சாலையில் சென்று காந்தி நகரில் முடிவடைந்தது. அப்போது, பொதுமக்களிடையே கார் ஓட்டும் உரிமையாளர்கள், மற்றும் ஓட்டுநர்கள் ஆகியோர் பாதுகாப்புக் கருதி சீட் பெல்ட் அணிந்து காரை இயக்கவேண்டும், போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும், தமிழகத்தை விபத்தில்லா மாநிலமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட  விழிப்புணர்வுப் பிரசாரத்தையும் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் மேற்கொண்டனர்.

உடன் இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துக் காவல்துறையினர், நகர் மற்றும் தாலுகா காவல்துறையினர், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள், சொந்தமாகக் கார் வைத்திருப்போர் மற்றும் ஓட்டுநர்கள் நேரில் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.