காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தொடரும் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்:  ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் படுத்துறங்கிய மாற்றுத்திறனாளிகள்

தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் குடியேறும்  போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

News image
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் படுத்துறங்கிய மாற்றுத்திறனாளிகள்.
Updated On :10 பிப்ரவரி 2021, 5:56 am

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் குடியேறும்  போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூரில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 21 பேரை நகர் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட 21 பேரும் தங்களது வீடுகளுக்கு செல்லாமல் திடீரென மீண்டும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்

இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களுடன் வட்டாட்சியர் சரவணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தபோதும் இரவு 10 மணியை கடந்ததால் அங்கேயே படுக்கையை விரித்து உறங்கினர். 

இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டக்காரர்கள் தனியாருக்குச் சொந்தமான மண்டபத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டனர். மண்டபத்திற்கு கொண்டுச் செல்லப்பட்ட போதும் அங்கும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். 

இதனை தொடர்ந்து தனியார் திருமண்டம் மண்டபத்திற்கு முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.