/

மேட்டூர் காவிரியில் முன்னோர்களுக்கு தற்பணம்

தை அமாவாசையை முன்னிட்டு சேலம் மாவட்டம், மேட்டூர் காவிரி கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு வியாழக்கிழமை தர்ப்பணம் செய்தனர்.

News image

தை அமாவாசையை முன்னிட்டு மேட்டூர் காவிரி கரையில் எள், அரிசி மாவு கலந்து பிண்டம் பிடித்து அதனை ஆற்றில் விட்டு வணங்கிய பொதுமக்கள்.

Updated On :11 பிப்ரவரி 2021, 5:00 am


தை அமாவாசையை முன்னிட்டு சேலம் மாவட்டம், மேட்டூர் காவிரி கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு வியாழக்கிழமை தர்ப்பணம் செய்தனர்.

Story image

வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓத எள், அரிசி மாவு கலந்து பிண்டம் பிடித்து அதனை ஆற்றில் விட்டு வணங்கினர்.

தை அமாவாசையை முன்னிட்டு மக்கள்  தங்கள் முன்னோர்களுக்கு கங்கை மற்றும் காவிரி போன்ற நீர் நிலைகளிலில் தர்ப்பணம் செய்வதால் குடும்பத்தில் முன்னோர்களின் ஆசீர்வாதம் மூலம் குடும்பத்தில் நன்மைகள் பெருகும் என்பது ஐதீகம். இதன்படி, வியாழக்கிழமை சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் காவேரி பாலம் காவிரி படித்துறையில் சேலம்,  தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து வந்த மக்கள் தர்ப்பணம் செய்தனர்.

Story image

அவர்கள் வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓத எள், அரிசி மாவு கலந்து பிண்டம் பிடித்து அதனை ஆற்றில் விட்டு வணங்கினர்.

Story image

தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் மக்கள்.

பின்னர் ஆற்றில் புனித நீராடி, காவிரி நீரை தீர்த்தமாக தங்களது வீடுகளில் தெளிக்கச் எடுத்துச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.