டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

அரசுப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், மறியல்: 120 பேர் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் பணியாளர் சங்கத்தினர் 120 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். 

News image
அரசுப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Updated On :12 பிப்ரவரி 2021, 7:42 am

DIN

கடலூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் பணியாளர் சங்கத்தினர் 120 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். 

அரசுப் பணியாளர்களுக்கு 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு டிஎன்சிஎஸ்சிக்கு இணையான ஊதியம் மற்றும் தனித்துறை அமைக்க வேண்டும், டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 25 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தினர் மறியல் போராட்டம் அறிவித்தனர்.

அதன்படி, கடலூரில். மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் கு.சரவணன் தலைமையில் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலைமறியல் ஈடுபட்டனர். இதனையடுத்து 50 பெண்கள் உள்பட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.