கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நெல்லை அருகே இளைஞர் கொலை

திருநெல்வேலி அருகே உள்ள மானூர் காட்டுப்பகுதியில் உடலில் காயங்களுடன் கொலைசெய்யப்பட்டுக் கிடந்த இளைஞர் உடலை போலீசார் சனிக்கிழமை மீட்டனர். 

News image
சம்பவ இடத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் நேரில் ஆய்வு
Updated On :27 ஜனவரி 2024, 7:31 pm

DIN


திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே உள்ள மானூர் காட்டுப்பகுதியில் உடலில் காயங்களுடன் கொலைசெய்யப்பட்டுக் கிடந்த இளைஞர் உடலை போலீசார் சனிக்கிழமை மீட்டனர். 

திருநெல்வேலி அருகே உள்ள மானூர் காட்டுப்பகுதியில் இளைஞர் ஒருவர் உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக மானூர் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Story image

கொலைசெய்யப்பட்டுக் கிடந்த இளைஞர் அஜித்

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் தச்சநல்லூர் அருகே உள்ள சத்திரம் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் அஜித்(32) என்பது தெரியவந்தது. இவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

மேலும், இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் ஆய்வாளர் நெ.மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.