கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சின்னமனூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்

தேனி மாவட்டம் சின்னமனூரில் காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

News image
சின்னமனூரில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
Updated On :27 ஜனவரி 2024, 7:31 pm

DIN

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூரில் காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சின்னமனூர் ஜக்கம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்த ஐயர் சாமி(50).இவர் வெள்ளிக்கிழமை காவல் நிலையம் எதிரே உள்ள தேனீர் கடையில் தேனீர் அருந்த சாலையை கடந்து உள்ளார். அப்போது தேனியிலிருந்து உத்தமபாளையம் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத சரக்கு வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். 

Story image

விபத்தில் இறந்த ஐயர் சாமி.

இந்நிலையில், தேனி  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஐயர் சாமி சனிக்கிழமை உயிரிழந்தார்.

இது சம்பந்தமாக சின்னமனூர் காவல் நிலைய போலீசார் அடையாளம் தெரியாத வாகனத்தை கண்டுபிடிப்பதில் மெத்தனம் காட்டுவதாக கூறி அவரது உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை காலையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சின்னமனூர் போலீசார் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.