ஶ்ரீபெரும்புதூர் அருகே விஷவாயு தாக்கி மூன்று பேர் பலி

ஶ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவனத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியை  சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்தனர். 
விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள்.
விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள்.


ஶ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவனத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்தனர். 

ஶ்ரீபெரும்புதூர் அடுத்த காட்டரம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் ஶ்ரீ வெங்கடேஷ்வரா கேட்டரிங் சர்வீஸ் என்ற தனியார் நிறுவனத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியை ஞாயிற்றுக்கிழமை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த  காட்டரம்பாக்கம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த பாக்கியராஜ்(40), காட்டரம்பாக்கம் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன்(40), அமரம்பேடு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்(42) ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த சோமங்கலம் போலீஸார் பலியானவர்களின் சடலங்களை மீட்டு ஶ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து சோமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com