சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ராணிப்பேட்டையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டையில் விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

News image
Updated On :16 பிப்ரவரி 2021, 9:29 am

DIN

ராணிப்பேட்டையில் விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் திருத்தச் சட்ட மசோதாக்களைத் திரும்பப் பெற வேண்டும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் அனைத்தும் நிபந்தனைகள் இன்றி தள்ளுபடி செய்ய வேண்டும், 60 வயது நிரம்பிய அனைத்து விவசாயிகளுக்கும், அனைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், சாலை அமைக்கும் திட்டத்துக்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதைக் கைவிட வேண்டும், தென்பெண்ணை - பாலாறு உள்ளிட்ட தென்னக நதிகள் இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும், பாலாறு மாசடைவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திக் கண்டன கோஷங்கள் எழுப்பினர். 

Story image

இதில் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதிலும் இருந்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாயச் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.