47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சட்ட விதிகளுக்கு உள்பட்டு செயல்படுவேன்: தமிழிசை

புதுச்சேரி சட்ட விதிகளுக்கு உள்பட்டு செயல்படுவேன் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

News image
தமிழிசை செளந்தரராஜன்
Updated On :17 பிப்ரவரி 2021, 1:22 pm

DIN

சட்ட விதிகளுக்கு உள்பட்டு செயல்படுவேன் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழிசை சௌந்தரராஜனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாளை காலை 9 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதால், தமிழிசை செளந்தரராஜன் புதுச்சேரி விமான நிலையத்திற்கு  வருகை புரிந்தார்.

அப்போது புதுச்சேரி விமான நிலையத்தில் தமிழிசைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பின்னர் பேசிய அவர், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. புதுச்சேரி சட்ட விதிகளுக்கு உள்பட்டு செயல்படுவேன். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.