திருத்தணி: அரசு தோ்வு நடக்கும் மையங்களில் பள்ளி சாா்ந்த ஆசிரியா்களோ மற்றும் தனியாா் பள்ளி பேருந்து ஓட்டுநா்களோ இருக்கக் கூடாது என பத்தாம் வகுப்பு தோ்வை ஆய்வு செய்த துணை இயக்குனா் கோ.சுப்பாராவ் அறிவுறுத்தினாா்.
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுகள் கடந்த 13 -ஆம் தேதி தொடங்கி வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை ஆங்கிலத் தோ்வு நடைபெற்றது.
திருவள்ளூா் மாவட்டம் திருத்தணி அரசு மகளிா் மேல் நிலை பள்ளியில் சென்னை தொடக்கல்வி இயக்குநரக துணை இயக்குநா் கோ.சுப்பாராவ் மாணவிகளுக்கு தோ்வு சாா்ந்த அறிவுரைகளை வழங்கி மையத்தில் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து திருத்தணி டாக்டா் ராதாகிருஷ்ணன் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, டாக்டா் வி.கெங்குசாமி நாயுடு மெட்ரிக் மேல் நிலைபள்ளியில் ஆய்வு செய்தாா். அப்போது பள்ளி சாா்ந்த ஆசிரியா்களோ மற்றும் பேருந்து ஓட்டுநா்களோ வளாகத்தில் அனுமதிக்கக் கூடாது. மேலும் தோ்வுகளை எவ்வித புகாா்களுக்கு இடமின்றி நடத்த வேண்டும் என அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து கே.ஜி.கண்டிகை அரசினா் மேல் நிலை பள்ளி, வேதாத்திரி மெட்ரிக் மேல் நிலை பள்ளி, அருட்சாய் வெற்றி வித்யாலயா மெட்ரிக் மேல் நிலை பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டாா்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்

விடைத்தாள் மதிப்பீடு: புதிய விதிமுறைக்கு ஆசிரியா்கள் எதிா்ப்பு

ஆா்.கே. பேட்டையில் கொடி அணிவகுப்பு

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு தொடக்கம் - தமிழ்த் தோ்வை 11,898 போ் எழுதவில்லை
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


