பெட்ரோல், டீசல் விலை உயர்வு: உசிலம்பட்டியில்  கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
உசிலம்பட்டியில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.
உசிலம்பட்டியில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.
Published on
Updated on
1 min read

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

உசிலம்பட்டி தேனி ரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உசிலம்பட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ராமர் தலைமையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு மாநில தலைவர் செல்லக்கண்ணு, மாதர் சங்கம் முத்துராணி, கம்யூனிஸ்ட் கட்சி மார்க்கண்டன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு தமிழகத்தில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com