மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பிப்.24-ல் காங். செயற்குழுக் கூட்டம்: கே.எஸ்.அழகிரி

சட்டப் பேரவை தேர்தலையொட்டி, பிப்ரவரி 24-ம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

News image
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி (கோப்புப்படம்)
Updated On :21 பிப்ரவரி 2021, 12:08 pm

DIN

பிப்ரவரி 24-ம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி,  போட்டியிடும் தொகுதிகள் குறித்து செயற்குழுவில் முடிவெடுப்போம் என்று சுட்டிக்காட்டினார்.

கட்சிப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும், புதிய வேட்பாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்களுக்கு தற்போதுதான் காவிரி-குண்டாறு இணைப்பு ஞாபகம் வருகிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.