விருதுநகரில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். இதில் எம்ஜிஆர் மன்ற மேற்கு மாவட்டச் செயலர் கோகுலம் எம்.தங்கராஜ், ஒன்றிய பெருந்தலைவர் சுமதி ராஜசேகர் உள்பட அதிமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.