கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இஸ்ரோவிற்கு துணை முதல்வர் வாழ்த்து

பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோவிற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் (கோப்புப்படம்)
Updated On :28 பிப்ரவரி 2021, 9:59 am

DIN

பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோவிற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரேசில் நாட்டுக்கு சொந்தமான அமேசானியா-1 உள்பட 19 செயற்கைக் கோள்கள், பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் மூலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று (பிப்.28) காலை 10.24 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டில் கொண்டு செல்லப்பட்ட 19 செயற்கைக்கோள்களும் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.

இது குறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ''ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள்.

இதில், கூடுதல் சிறப்பம்சமாக 19 செயற்கை கோள்களில் தமிழகத்தின் சில பொறியியல் கல்லூரி மாணவர்களின் செயற்கை கோள்களும் இடம்பெற்றுள்ளதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். இளம் விஞ்ஞானிகளுக்கு எனது பாராட்டுகள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.