கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சமூக சேவகர் விருது அளிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் சமூக சேவகர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

News image
சமூக சேவகர் விருதுபெற்ற  ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் பணியாற்றும் தீயணைப்பு வீரர்கள்.
Updated On :27 ஜனவரி 2024, 7:10 pm

DIN

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் சமூக சேவகர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஊத்தங்கரை கிளை ரெட் கிராஸ் தலைவர் தேவராசு, துணைத் தலைவர் ராஜா, சமுக ஆர்வலர் சசி என்கிற கோமதி, உதவி தலைமை ஆசிரியர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

Story image

ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் பணியாற்றும் தீயணைப்பு வீரர்கள் ராமமூர்த்தி, விஜயகுமார், அந்தோணிசாமி,அன்பு,  கிருஷ்ணமூர்த்தி, முனுசாமி, உத்திரகுமார், இராமு, சிதம்பரம், மணிகண்டன், சமுத்திரன், சீனிவாசன் ஆகியோரை பாராட்டி சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது. 

நோய் தொற்று காலத்தில் கிருமிநாசினி அடித்தல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல், இல்லாதோர்க்கு உணவு வழங்குதல், உள்பட பல்வேறு பணிகளை செய்த ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் பணியாற்றும் அனைவருக்கும் சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.