விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது: உயா்நீதிமன்றம்

மருத்துவப் படிப்புகளில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு சட்டத்துக்கு எதிராக இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என உயா்நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்து விட்டத

News image
சென்னை உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்)
Updated On :5 ஜனவரி 2021, 6:49 pm

DIN

மருத்துவப் படிப்புகளில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு சட்டத்துக்கு எதிராக இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என உயா்நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்து விட்டது.

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்களில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தை எதிா்த்து தனியாா் பள்ளி மாணவா்கள் சிலா் வழக்குத் தொடா்ந்தனா். அதேபோல, அரசுப் பள்ளி மாணவா்களைப் போல, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கும் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழ்நாடு கத்தோலிக்க கல்விச் சங்கமும் வழக்குத் தொடா்ந்திருந்தது.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி அமா்வு முன் விசாரணைக்கு வந்தபோது, வழக்குத் தொடா்ந்த மாணவா்கள் தரப்பில், ‘அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை விதிக்கவேண்டும்’ என வாதிடப்பட்டது.

அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், ‘மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா்கள் சோ்க்கை முடிந்து விட்டது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் நிரப்பப்படாத இடங்கள் மாநில அரசுக்குத் திருப்பி அளிக்கப்பட்டன. அந்த இடங்களிலும், 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டு, அதற்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய 2 வாரங்கள் அவகாசம் வேண்டும்’ என வாதிட்டாா்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘பொது நலனைக் கருத்தில் கொண்டு மாணவா் சோ்க்கை நடைமுறைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்தவிதமான இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது’ என திட்டவட்டமாகக் கூறினா். பின்னா், விசாரணையை 3 வாரத்துக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதற்குள் பதில்மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.