மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கிராமக் கூட்டம்

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அவிநாசி கருணைபாளையத்தில் கிராமக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

News image
கருணைபாளையத்தில் கிராமக்கூட்டம்
Updated On :5 ஜனவரி 2021, 11:12 am

DIN

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அவிநாசி கருணைபாளையத்தில் கிராமக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ஏ.முத்துரத்தினம் தலைமை வகித்தார். வேலாயுதம்பாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் பி.சாமியப்பன் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், ஒன்றிய செயலாளர் எஸ்.வெங்கடாசலம், அவிநாசி ஒன்றியக் குழு உறுப்பினர் பி.முத்துசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  

இதில் கூட்டம் துவக்கமாக தில்லி விவசாய போராட்டத்தில் உயிர்நீத்த விவசாய தியாகிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, தில்லி போராட்ட நிதியாகப் பொறுப்பாளர்கள் வேலுச்சாமி ரூ.2 ஆயிரம், சிவசாமி ஆயிரம் ரூபாயும் வழங்கினர். 

இதைத்தொடர்ந்து, கருணைபாளையம் தவிச கிளை நிர்வாகிகளாக தலைவர் ரங்கசாமி, செயலாளர் சக்திவேல், பொருளாளர் பொன்னுசாமி, துணைத் தலைவர் வேலுச்சாமி, துணைச் செயலாளர் தங்கராசு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிறைவாக தில்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்தும், மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியும் கோஷம் எழுப்பினர். கூட்டத்தில் வேலாயுதம்பாளையம், புதுப்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.