ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கடலூரில் மரம் விழுந்து தொழிலதிபர் சாவு

கடலூரில் சாலையோரம் இருந்த மிகப்பெரிய புளிய மரம் சாய்ந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்து தொழிலதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

News image
புதுச்சேரி -கடலூர் ஆல்பேட்டை அருகே சாலையோரம் இருந்த மிகப்பெரிய புளிய மரம் சாய்ந்து விழுந்தது.
Updated On :6 ஜனவரி 2021, 6:39 am

DIN

கடலூர்: கடலூரில் சாலையோரம் இருந்த மிகப்பெரிய புளிய மரம் சாய்ந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்து தொழிலதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

கடலூர் மாவட்டம், புவனகிரியைச் சேர்ந்தவர் பி.குமணன் (50). கடலூர் எஸ். என் சாவடியில் வசித்து வருகிறார். இவர் புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கத்தில் பேக்கேஜிங் யூனிட் நடத்தி வருகிறார். 

இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை முதலே கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக புதுச்சேரி -கடலூர் ஆல்பேட்டை அருகே சாலையோரம் இருந்த மிகப்பெரிய புளிய மரம் சாய்ந்து விழுந்தது.

அப்போது தனது மோட்டார் சைக்கிளில் புதுச்சேரியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த குமணன் மீது மரம் விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதனைத் தொடர்ந்து மரத்தை அகற்றும் பணியில் காவலர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.