ஜன. 16ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல்வர், துணை முதல்வர் இணைந்து தொடங்கி வைக்கின்றனர்

ஜனவரி 16 ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து தொடங்கி வைக்கின்றனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

ஜனவரி 16 ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து தொடங்கி வைக்கின்றனர். 

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டில் ஜனவரி 15 முதல் 31-ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

அவற்றில் உலக அளவில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பிரசித்தி பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி அளித்து அதற்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஜனவரி 14-இல் அவனியாபுரம், ஜனவரி 15-இல் பாலமேடு, ஜனவரி 16-இல் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.

மேலும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், ஜனவரி 16 ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து தொடங்கி வைக்கின்றனர். இத்தகவலை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com