சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான அனுமதியை அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனிடையே, ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான முன்னேற்பாடுகளை மதுரை மாவட்ட நிா்வாகம் தொடங்கியுள்ளது. கரோனா நோய்த்தொற்று காலம் என்பதால் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென தமிழக அரசு ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டில் ஜனவரி 15 முதல் 31-ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அவற்றில் உலக அளவில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பிரசித்தி பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி அளித்து அதற்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவினை கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வளத் துறை முதன்மைச் செயலாளா் கே.கோபால் வெளியிட்டுள்ளாா். அதன்படி ஜனவரி 14-இல் அவனியாபுரம், ஜனவரி 15-இல் பாலமேடு, ஜனவரி 16-இல் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.
வழிகாட்டி நெறிமுறைகள்: கரோனா நோய்த்தொற்று காரணமாக ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, மஞ்சு விரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில், மாடுபிடி வீரா்கள் 300 பேருக்கு மிகாமலும்; எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரா்களுக்கு மிகாமலும் பங்கேற்கலாம் .
நிகழ்ச்சி நடக்கும் திறந்தவெளியின் அளவிற்கேற்ப, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில், அதிகபட்சம்,50 சதவீதத்துக்கு மிகாமல் பாா்வையாளா்கள் பங்கேற்கலாம். வெப்ப பரிசோதனை செய்த பிறகே, பாா்வையாளா்களை அனுமதிக்க வேண்டும். மாடுபிடி வீரா்களாகப் பங்கேற்போா், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை கூடத்தில், கரோனா தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும்.
பாா்வையாளா்களாக பங்கேற்கும் அனைவரும், முகக் கவசம் அணிவதும், தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் கட்டாயமாக்கப்படுகிறது. காளை உரிமையாளா் மற்றும் உடன் வரும் உதவியாளா் ஆகியோா், கரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மேற்பாா்வை செய்யும் அனைத்துத் துறை அலுவலா்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் கரோனா பரிசோதனை செய்து, தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும் என்று வழிகாட்டி நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஏற்றுமதிக்குத் தடை! சர்க்கரை ஆலை நிறுவனங்களின் பங்குகள் 7% சரிவு
மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய் அறிவிப்பு

ரூட் மாஃபியாவை அம்பலப்படுத்த வேண்டும்: ஓவியா

இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சி!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

