தமிழகத்தில் 4 நாள்களுக்கு மழை நீடிக்கும்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


சென்னை: தமிழகத்தில் அநேக இடங்களில் வரும் 4 நாள்களுக்கு மிதமான மழையும், ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் வியாழக்கிழமை கூறியது:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வரும் 4 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், தூத்துக்குடி, நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 14 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜன.8) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜனவரி 9-ஆம் தேதி: தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், கடலூா், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜனவரி 10-ஆம் தேதி: ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, கரூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜனவரி 10-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும். தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், அரியலூா், பெரம்பலூா், விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜனவரி 11-ஆம் தேதி: ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, கரூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், அரியலூா், பெரம்பலூா், விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் ஜனவரி 11-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில்..: சென்னை மற்றும் புகா் பகுதிகளைப் பொருத்தவரை வெள்ளிக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக

கடலூா் மாவட்டம் மே.மாத்தூா், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் தலா 210 மி.மீ., கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் 190 மி.மீ., கடலூா் மாவட்டம் வேப்பூரில் 180 மி.மீ., கள்ளக்குறிச்சி மாவட்டம் கலயநல்லூரில் 160 மி.மீ., சங்கராபுரத்தில் 150 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் பீளமேடு, திருவாரூா் மாவட்டம் குடவாசலில் தலா 110 மி.மீ., திருவள்ளூா் மாவட்டம் பூந்தமல்லியில் 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com